Monday 16 March 2009

உள்ளத்தில் நல்ல உள்ளம்...

My ALL time favourite. Enjoy

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா, கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா, கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா

தாய்க்கு நீ மகன் இல்லை
தம்பிக்கு அண்ணன் இல்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா

உள்ளத்தில் ...

மன்னவர் பணி ஏற்கும்
கண்ணன் பணி செய்ய
உன்னடி பணிவானடா
மன்னித்து அருள்வாயடா, கர்ணா

உள்ளத்தில் ...

செஞ்சோற்று கடன்தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் விழ்தாயட, கர்ணா
வஞ்சகன், கண்ணனடா

உள்ளத்தில் ...

Friday 13 March 2009

பூ மாலை வாங்கி வந்தார்...

A masterpiece by Jesudas

பூ மாலை வாங்கி வந்தார் பூக்களில்லையே
செவியில்லை இன்னொரு இசையெதற்கு விழியில்லை இன்னொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது

பூ மாலை...

கையில் கிண்ணம் பிடித்துவிட்டான் இனிக்கின்ற விஷத்துக்குள் இறங்கிவிட்டான்
ராகம் தாளம் மறந்துவிட்டான் ரசிகனின் கடிதத்தைக் கிழித்துவிட்டான்
இசைக்கொரு குயிலென்று பேரெடுத்தான் இருமலைத்தானின்று சுரம்பிடித்தான்
மனிதர்கள் இருப்பதை மறந்துவிட்டான் மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்
போதையின் பாதையில் போகின்றான் தன்முகமே தான் மறந்தான்
சூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அழ

பூ மாலை..

நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான் குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான் சபதத்தை அவன் இங்கு உடைத்துவிட்டான்
கடற்கரையெங்கும் மணல்வெளியில் காதலி காலடி தேடினான்
மோகனம் பாடும் வேளையிலும் சிந்துவின் ராகம் பாடினான்
விதியெனும் ஊஞ்சலில் ஆடினான், போதையினால் புகழ் இழந்தான்
சூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அழ

பூ மாலை

எந்தன் நெஞ்சில்...

Another awesome song
Movie: Kalaignan

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா

எந்தன்...

இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீதானா? வா....

பனியில் நனையும் மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே

உனக்கென பிறந்தவள் நானா
நிலவுக்குத் துணை இந்த வானா

வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்
வந்தாயே உறவாக இந்நாள்...

எந்தன்...

சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்
நகங்கள் பதிந்தால் காயங்கள் தோன்றும்

உதடுகள் உரசிடத்தானே..
வலிகளும் குறைந்திடும் மானே...

நான் சூடும் நூலாடை போலே
நீ ஆடு பூமேனி மேலே...

எந்தன்...

Yaavarum Nalam – Review

I usually go to movie on Friday night every week and this is happening for the last 5years. We (I & Karthik) just go a local theatre near to my home where we can get tickets without any problem. We watch all movies on the first day of release as most of the movies will get released on Friday.

Last Friday as a usual routine we went to the theatre to watch a movie (interesting part of this is we generally decide the movie only after reaching the theatre) and decided to watch “Yaavarum Nalam” on that night. We have no idea about that movie so we didn’t have any expectations either.

Very rarely do you get to see a movie that's not just logical and has good performances, but comes with a deliciously intriguing thriller. As all good thrillers do, this one too begins with a happy family. Matters get more complicated when a new TV serial appears every afternoon at exactly 13.00 hours on Eye TV, and bizarre events start a roller-coaster ride that somehow end up influencing real life.

The story is the king here and was well narrated. The debutant director Vikram K Kumar has given us a perfect thriller with proper sequence of events and perfect screenplay. Music in the movie is worth a mention. It is neither too quiet, nor too loud. We really enjoyed the movie after long time and I recommend this movie to all movie goers who love to watch a perfect thriller.

அற்றைத்திங்கள் வானிடம்...

நான் ரசித்த இன்னொரு பாடலின் வரிகளை இங்கே தந்து உள்ளேன்.
படம்: சிவப்பதிகாரம்

அற்றைத்திங்கள் வானிடம்
அல்லிச்செண்டோ நீரிடம்
சுற்றும் தென்றல் பூவிடம்
சொக்கும் ராகம் யாழிடம்
காணுகின்ற காதல் என்னிடம்
நான்,தேடுகின்ற யாவும் உன்னிடம்

அற்றைத்திங்கள்....

அடி தொட ,முடி தொட,ஆசை பெருகிட,நேரும் பலவித பரிபாஷை
பொடி பட ,பொடி பட, நாணம் பொடி பட,கேட்கும் மனதினில் உயிரோசை
முடி தொட ,முகம் தொட ,மோகம் முழுகிட,வேர்க்கும் முதுகினில் இதிகாசம்
உருகிட உருகிட,ஏக்கம் உருகிட,கூடும் அனலிது குளிர் வீசும்]

குலுங்கினேன் உடல் கூசிட,கிறங்கினேன் விரல் மேய்ந்திட
மயங்கினேன் சுகம் சேர்ந்திட,தளும்பினேன் எனை நீ தொட,பாய்ந்திட,ஆய்ந்திட
காணுகின்ற காதல் என்னிடம்
நான்,தேடுகின்ற யாவும் உன்னிடம்

அற்றைத்திங்கள் வானிடம்...

உடல் எது,உடை எது,தேடும் நிலை இது,காதல் கடன் இது ,அடையாது
இரவிது, பகலிது, தேங்கும் சுகம் இது, சாகும் வரையிலும் முடியாது
கனவெது, நினைவெது,கேட்கும் பொழுதிது,காமப்பசி வர அடங்காது
வலமிது, இடமிது,வாட்டும் கதையிது,தீண்டும் வரையிலும் விளங்காது

நடுங்கலாம் குளிர் வாடையில்,அடங்கலாம் ஒரு ஆடையில்
தயங்கலாம் இடைவேளையில்,உறங்கலாம் அதிகாலையில்,கூடலில்,ஊடலில்
காணுகின்ற காதல் என்னிடம்
நான்,தேடுகின்ற யாவும் உன்னிடம்

அற்றைத்திங்கள் வானிடம்...

Thursday 12 March 2009

பிச்சை பாத்திரம்...

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
யாம் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா? இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா?
அம்மையும் அப்பனும் தந்ததா? இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா?
இம்மையை நான் அறியாததா?
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்?
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்?
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

ஒரு முறையா? இரு முறையா? பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினயா? பழ வினயா?, கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய் மலர் பதத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே

Thursday 5 March 2009

அகிம்சை போராட்டம்...

நீ பேசாமல் நடத்தும் இந்த மௌனப்புரட்சி
என்னை பீரங்கி குண்டுகளால் துளைக்கிறது
காந்தியின் மகளே !!!
வேண்டாமே இந்த அகிம்சை போராட்டம்.

Wednesday 4 March 2009

புன்னகை...

உன் சிரிப்பினால் நான் சிகரங்கள் கடந்தேன்
உன் புன்னகையால் நான் புதையல்கள் கண்டேன்
உயிரே, உன் சந்தோஷம் என் சுவாச காற்று!!
நான் இறந்தாலும் நீ புன்னகை செய்
உன் அழுகையை என் ஆன்மாவும் தாங்காது