Showing posts with label Thoughts. Show all posts
Showing posts with label Thoughts. Show all posts

Thursday, 6 March 2008

சமர்ப்பணம் ...

நான் இந்த பக்கங்களை எழுத முதல் காரணம் என் நண்பன் அருண். நாங்கள் இருவரும் ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக இருக்கின்றோம். அருண் முதலில் எழுத ஆரம்பித்தவுடன் என்னையும் எழுத சொன்னான் ஆனால் எனக்கு சிறு தயக்கம் இருந்தது.

சில காலங்கள் மற்றவர்கள் எழுதுவதை கவனிக்கும் பொழுது நமக்கும் எழுத வேண்டும் என்ற எண்ணம் பிறக்கின்றது. இந்த நான்கு மாத காலம் நிறைய நண்பர்களின் பக்கங்களை படித்து பார்த்தேன். இன்று எனக்கும் எழுத வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.

இங்கு என் உலகத்தில் நடக்கும் அனைத்தையும் எழுத போகின்றேன். நான் சந்திக்கும் மனிதர்கள், என்னை பாதிக்கும் சம்பவங்களை அனைத்தையும் இங்கு வடிக்க போகின்றேன்.