Thursday, 21 August 2008

காதல்...

இன்று காலை எழுந்ததில் இருந்து ஆனந்த் ரொம்பவே பரபரப்பாக இருந்தான். கண்ணாடியில் அவன் முகம் பார்த்து வெட்கப்பட்டு கொண்டான். இன்றோடு பத்து வருஷம் ஆகுது லாவன்யாவை பார்த்து.

பார்த்த முதல் நாளே அவள்மேல் காதல் கொண்டான். இந்த பத்து வருசத்துல நெறைய பேசியாச்சி, பழகியாச்சி ஆனா தன்னோட காதல சொல்ல இன்னும் ஆனந்துக்கு தைரியம் வரவில்லை. "எப்படியாவுது இன்னிக்கி லாவண்யா கிட்ட சொல்லிடனும்" தனக்கு தானே சொல்லிக்கொண்டான். லெட்டர், ஒரு ரோஜா ரெண்டுமே இருக்கு எப்படியும் இன்னிக்கி சொல்லிடனும் - மனதுக்குள் சபதம் எடுத்துக்கொண்டான்.

நேத்து இரவு முழுக்க இதே சிந்தனை தான் - எப்படி ஆரம்பிக்கறது? தப்பா நெனசிட்டா ? மறுபடியும் அதே பழைய தயக்கம். சொன்னதும் சிரிப்பாலோ? சரி என்ன நடந்தாலும் கவலையில்லை எப்படி சொல்லிடனும். அவளை முதல்ல பார்த்த நாளுல இருந்து இன்னிக்கி வரைக்கும் எப்படி அவளை உயிருக்கு உயிரா காதல் செயுறேன்னு சொல்லிடனும். இந்த அவஸ்தை இதுக்கு மேல வேணாம்.

தன்னோட பெட்டிய தொறந்து எல்லா வாழ்த்து அட்டையையும் எடுத்து வைத்துக்கொண்டான். மறுபடியும் கண்ணாடி முன்னாடி இன்னும் ஒரு தடவை எல்லாத்தையும் சொல்லி பார்த்துக்கொண்டான். லாவண்யா உன்னை நான் உயிருக்கு உயிரா காதலிக்குறேன், எவ்வளவோ தடவை சொல்லணும் நெனச்சி இருக்கேன் ஆனா... இல்ல நேத்துல இருந்து பயிற்சி பண்ணினது இது இல்லை.

தன்னை தானே கோவமா பார்த்துக்கொண்டான். எவ்வளவு பயிற்சி பண்ணியாச்சி இப்பவே இப்படி உளறின அப்புறம் லாவண்யா முன்னாடி கண்டிப்பா சொல்ல முடியாது. சரி கடைசியா ஒரு முயற்சி - லாவண்யா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் நீ தப்பா நெனச்சிக்க கூடாது, ரொம்ப நாலா மனசுக்குள்ள போட்டு பூட்டி வெச்சி இருக்கேன் இனிமேல் முடியாது.

உன்ன பத்து வருசமா காதலிக்குறேன், எத்தனையோ தடவை சொல்லணும் நெனச்சி இருக்கேன் ஆனா தைரியம் வரல. உனக்காக இந்த பத்து வருசமா நான் வாங்கி வெச்சி கொடுக்காத வாழ்த்து அட்டை, கடைசியா வாங்கின கரடி பொம்மை எல்லாத்தையும் கொண்டுவந்து இருக்கேன் - இது கொஞ்சம் சரியா வந்த மாதிரி இருந்தது அவனுக்கு. கண்ணாடியை பார்த்து சிரித்துக்கொண்டான்.

அவனுக்கு பின்னாடி யாரோ நடந்து வரும் சத்தம். இருதயம் வேகமா துடிக்க ஆரம்பிக்கிறது. அது லாவண்யா தான். ஒருதடவை மூச்சி வாங்கி கொண்டான். மெதுவாக திரும்பி லாவன்யாவை பார்த்தான். பத்து வருசத்துக்கு முன்னாடி பார்த்த மாதிரியே இருந்தாள். லாவண்யா உன்கிட்ட ஒரு ... ஆனந்த் பேச ஆரம்பித்ததும் "அப்பா" என்று ஆசையாக கழுத்தை கட்டி கொண்டால் அவன் செல்ல மகள் சித்ரா.

தான் பார்த்து காதலித்த (யாருக்கும் தெரியாமல்) பெண்ணையே அப்பா அம்மா பார்த்துட்டு வந்து சொன்னதும் ஆனந்துக்கு உலகமே கைக்குள் வந்த சந்தோஷம். லாவன்யாவை பெண் பார்த்த அன்றே அவளிடம் சொல்லவேண்டும் என்று நினைத்தான் ஆனால் வார்த்தை வரவில்லை. இன்றோடு பத்து வருஷம் ஓடிவிட்டது.

Tuesday, 19 August 2008

கடவுளுக்கு ஒரு கடிதம் ...

இந்த கடிதம் கடவுள் இருக்காரா? இல்லையா? என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சி இல்லை. கடவுள் இருக்கார் அல்லது நம்மை விட பெரிய சக்தி ஒன்று உள்ளது என்ற நம்பிக்கையில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களில் ஒருவன் நான். என் மீது சிறு வயதில் இருந்து திணிக்கப்பட்ட நம்பிக்கையின் மீது எழுந்த, எழும் கேள்விகளை இங்கே கேட்கின்றேன்.

கடவுள் விடை அளிப்பாரா?

  • இந்த உலகில் என் இவ்வளவு ஏற்றத்தாழ்வுகள்?
  • ஏழைகள், அனாதைகள், உடல் ஊனமுற்றவர்கள் செய்த பாவம் என்ன?
  • போன ஜென்மத்தில் செய்த பாவத்தினால் இந்த ஜென்மத்தில் இப்படி அவதிபடுகிறார்கள் என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. செய்த பாவம் என்ன என்று தெரியாமல் தண்டனை அனுபவிப்பது நியாயமா?
  • தவறு செய்யும் மக்கள் சுகபோகத்துடன் வாழ்வதும், நேர்மையாய் இருப்பவர்கள் அவதிபடுவதும் எந்த விதத்தில் தர்மம்?
  • தீவிரவாதிகளின் குண்டுகளுக்கு அப்பாவி மக்கள் பலியாவது யார் செய்த பாவம்?
  • சில ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் தீயில் கருகி இருந்த குழந்தைகள் செய்த குற்றம் என்ன? அவர்களுக்கு என் இந்த தண்டனை?
  • சுனாமியில் இறந்து போனவர்கள் எல்லாரும் போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்களா?

இது போல பல கேள்விகள் என் போன்ற கோடிக்கணக்கான மக்களின் மனதில் இருக்கும். எல்லாம் விதிப்படி நடக்கும் என்றால் அந்த விதியை ஏன் இப்படி எழுத வேண்டும்?

குரங்கில் இருந்து பிறந்த மனிதன் பாவம் செய்தது விதியின் பயனால் தானே? அப்படியானால் மனிதனை பாவம் செய்ய சொன்னது யார் குற்றம்?

கடவுள் இதற்கு விடை அளிப்பாரா?

Thursday, 14 August 2008

5 Successful years …

I dedicate this post to my wonderful friend Arun who has completed 5 successful years of service in his first job. He joined has a fresher in a software company and this week he completed his 5 years service in the same company.

He is a valuable resource to the company and played significant roles in the last 5 years. I wish him success in all aspects of his life. His ambition is to become a CEO of company and I wish to become a CEO and be a successful man in his life.

Congrats Machi!! Wish you good luck. Love u.

Aah …

I heard a lot about writer Sujatha and about his novel through my friend in the last few months. My friend is a die hard fan of Sujatha and always praises Sujatha’s work to the core. After few months I got curious to read Sujatha’s novel and read few novels. They are really impressive and the level of knowledge the Author has got on the subject is really awesome.

You could have observed that in the movies like Anniyan, Sivaji etc. My friend suggested me to read a novel called “Aah” and the story is about an IIT guy suffering from “Auditory hallucination”. I was really surprised on hearing the plot of the story. Imagine a young guy (passed out from IIT and working in a software company) started hearing voice and the voice persuades him to commit suicide (Interesting right?).

The interesting part of the novel is that each episode of the novel ends with the word “Aah”. If you get a chance then try reading this novel and I am sure you will like it.

Wednesday, 16 July 2008

மெழுகுவர்த்தி

நீ தீண்டியதும் தீப்பிடித்து கொண்டேன்

உன் நினைவுகளால் சுடர் விட்டு எரிகிறேன்

பசி, தூக்கமின்றி உடல் மெலிந்து

உன்னை நினைத்து உருகிப்போகின்றேன்

மெழுகுவர்த்தியாய்.

Wednesday, 9 July 2008

அம்மா...

எனக்கு உயிர் கொடுத்து,
பத்து மாதங்கள் உன் கருவறையில்
என்னை பாதுகாத்து, பத்தியம் இருந்து,
ஈன்றெடுத்த நொடியில் மறுபிறவி எடுத்தாய்.

என் அழுகையின் அர்த்தம் புரிந்து
பாலுடினாய், ஈரத்துணி மாற்றினாய்,
கடிக்கும் எறும்பை அகற்றினாய்,
முத்தம் இட்டு நீ இருப்பதை உணர்த்தினாய்.

பள்ளி செல்லும் வயதில் என் ஆசானாய்,
என் மழலையின் முதல் ரசிகனாய்,
என்னை அலங்கரித்து, என்னை சுமக்கும் சேவகனாய்,
என்னக்காகவே வாழும் அடிமையாய் இருந்தாய்.

என் வெற்றியின் ரகசியமாய்,
தோல்வியில் துயலும் பொழுது என் தோழனாய்,
நல்லது தீயதை சொல்லித்தரும் வழிகாட்டியாய்,
என் வாலிப பருவத்தில் இருந்தாய்

இன்று நான் என் சொந்த காலில் நிற்பதாய் நினைக்கின்றேன்.
இன்றும் எனக்காக துடிக்கும் என் இதயமாய்,
என்னை இயங்க வைக்கும் என் சுவாசமாய்,
எனக்காகவே வாழ்ந்து கொண்டு இருக்கின்றாய்.

நீ துவண்டு நின்று நான் பார்த்ததில்லை,
உனக்காக வாழ்ந்ததாய் நினைவுகள் இல்லை,
என்னை வெறுத்ததாக அறிந்ததும் இல்லை,
கைமாறாக எதையும் நீ எதிர்பார்த்தது இல்லை.

உன்னை பெற நான் என்ன தவம் செய்தேன்?
இந்த நன்றிக்கடனை எந்த ஜென்மத்தில் தீர்ப்பேன்?
அன்னையே உன்னை வணங்குகிறேன்.
உன்னை கொடுத்த இறைவனுக்கும் நன்றி சொல்கிறேன்.

Friday, 13 June 2008

Dasavatharam – Review ...

Kamal Hasan deserves 10 Oscar. This is the thought came to my mind when I came out of the theatre last night. What a thought and performance. No other actor in the world can even think of doing such a film even in his wildest of the dreams. You can see the dedication and passion that Kamal has towards making a good movie and taking his acting to a new level.

He sets his own standards and tries to achieve them time and again. When the film started and for the first 2 minutes I thought this is going to be another “Hey Ram” but it is not. I still wonder how this man can speak in 10 different accent, style, modulation, language with matching body language. I was really impressed by the “Vincent Poovaragan”, “Balram Naidu”, “Tall man” (Forgot the name of the character) and “Krishnaveni” (95 yrs old women) characters.

Story is simple and pretty ordinary however the way Kamal linked all 10 characters is what makes this film interesting. Graphics were really good (Don’t compare with Hollywood films) and the Tsunami scene at the climax worth a mention here. My Kudos to Kamal and the entire unit.

This film worth a watch and I wish Kamal gets fitting recognition for his effort.