Tuesday 22 June 2010

ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா

சின்ன வயசுல (இப்ப எனக்கு ரொம்ப வயசு ஆயிடல) அதாவுது கொசுவத்தி சுருல ஒரு பதினஞ்சி வருஷம் பின்னால சுத்தினா அப்ப நான் அஞ்சவுது படிச்சிட்டு இருந்தேன். நியூட்டன் ஆப்பிள் விழுறதா பார்த்து எதையோ கண்டுபிடிச்ச மாதிரி நானும் ஒரு நாள் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தப்ப ஒரு ஐடியா தோணிச்சி. நாம என் ஹிந்தி படிக்க கூடாதுன்னு. உடனே எங்க அப்பா அம்மா கிட்ட இந்த விஷயத்த சொல்ல அவங்களுக்கு ரொம்ப சந்தோசம். ஹிந்தி படிச்சா டெல்லி ல கூட போய் வேலை செய்யலாம், அப்புறம் வெளிநாடுகலாம் கூட போலாம் (இது பக்கத்துக்கு வீட்டு ஆன்டி போட்ட பிட்டு). நான் கூட ஹிந்தி கத்துகிட்டா வெளிநாடுலாம் போகலாம் போலன்னு நம்பிட்டேன்.

தான் கெட்ட குரங்கு வானத்தையும் சேர்த்து கெடுத்ததாம் கதையா எங்க அண்ணா, சித்தி பையன் எல்லாரும் சேர்ந்து ஹிந்தி கத்துக்க முடிவு பண்ணினோம். பக்கத்து நகர் ல ஒரு ஐயர் மாமி ஹிந்தி சொல்லி தருவது தெரிஞ்சி அங்க எங்களை சேர்த்து விட்டாங்க. வழக்கம் போல அ ஆ ல ஆரம்பிச்சி ஒரு மாசத்துல வார்த்தைக்கு வந்தாச்சி, அதோட எங்க ஹிந்தி ஆர்வமும் சூன்யம் ஆயிடிச்சி. ஹிந்தி ல பூ, மற்றும் வேற சில வார்த்தைகளை கேட்டா சென்னை தமிழ் ல பேசுற கெட்ட வார்த்தை மாதிரி இருக்கும். அப்ப அதுக்கு அர்த்தம் தெரியாது ஆனா சில பசங்க பேசி கேட்டு இருக்கோம். இந்த வயசான மாமி ரொம்ப பொறுமையா எங்களுக்கு ஹிந்தி வார்த்தைகள் சொல்லி தர, நான் என் சித்தி பையன் கிட்ட என்னடா இந்த ஐயூர் மாமி கெட்ட வார்தைலாம் பேசுறாங்கனு ஆரம்பிச்சேன்.

அதுவரைக்கும் இதை எல்லாம் கண்டுக்காம ஹிந்தி படிச்சிட்டு இருந்த பசங்க எல்லாம் நம்ம அவுட் ஒப் பாக்ஸ் திங்கிங் பார்த்துட்டு அதே மாதிரி அவங்களும் கவனிக்க ஆரம்பிச்சாங்க. இந்த மாதிரி கொடூரமா யோசிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் ஹிந்தி போய் வெறும் தமிழ் கெட்ட வாரத்தைகள் தான் கவனிக்க ஆரம்பிச்சோம். ஹிந்தி டியூஷன் வந்தாலே ஒரு சிரிப்பும் கும்மாளமுமா இருப்போம். பாவம் அந்த மாமி இந்த விஷயம் தெரியாம ரொம்ப அக்கறையோடு சொல்லி கொடுத்துட்டு இருப்பாங்க.

இந்த மாதிரி விளையாட்டு தனமா ஒரு மாதிரி "ப்ராத்மிக்" னு சொல்லுற முதல் பரிட்சைய எல்லாரும் வெற்றிகரமா முடிச்சோம். நம்ம ஹிந்தி ஆர்வம் தான் சிரிப்பா சிரிகுதேனு இதோட நிறுத்திடலாம்னு நெனச்சா வீட்டுல இருக்குறவங்க விடுறதா இல்ல. சரி வெற்றி வேல்! வீர வேல்! னு சொல்லிகிட்டே "மத்தியமா " னு சொல்லுற ரெண்டாவுது பரிட்சைக்கு டியூஷன் போக ஆரம்பிச்சோம்.

"மத்தியமா " எனக்கு பெரிய சவாலா தான் இருந்துச்சி (நாம படிச்சா தானே!) எந்த வார்த்தை கேட்ட வார்த்தை மாதிரி இருக்குனு ஆராய்ச்சி பண்ணிடே இருந்ததால அந்த மாமி சொல்லி தந்தது எதுவுமே மனசுல பதியல. எல்லாரையும் கிண்டல் பண்ணிட்டு, சிரிசிட்டே மூணு மாசம் டியூஷன் ஓடிடிச்சி. பரிட்சைக்கும் தைரியமா (அப்பா காசு தானே) காசும் கட்டி, பரிட்சையும் எழுதியாச்சி. எழுதியதும் நமக்கு முடிவு தெரிஞ்சிடிச்சி இருந்தாலும் யார்கிட்டயும் சொல்லல. எதிர் பார்த்த மாதிரியே என்ன்ன தவிர அந்த டியூஷன் ல படிச்சா எல்லாரும் பாஸ்.

சரி இதோட விட்டுடுவாங்க நாம தப்பிச்சிட்டோம் னு நெனச்சா "முயற்சி திருவினை ஆக்கும்" னு சொல்லி மறுபடியும் "மத்தியமா " பரிட்சைக்கு டியூஷன் சேர்த்து விட்டாங்க. மறுபடியும் அந்த முறையும் பரீட்சை எழுதி பாஸ்க்கு ரெண்டு மார்க் கம்மிய வாங்கினேன் (ஆமாங்க பாஸ் ஆகல, அத தான் கொஞ்சம் அழகா சொன்னேன்). இந்த முறை எனக்கே கொஞ்சம் அசிங்கம தான் இருந்துச்சி. மூணாவுது முறைய டியூஷன் போகாம, நண்பர்கள் (நண்பர்களா அவனுங்க, என்னா நக்கல் பண்றானுங்க ஒரு சாதாரண ஹிந்தி பரிட்சைல பாஸ் ஆகலன்னு) கிட்ட சொல்லாம, வெறும் பரிட்சைக்கு மட்டும் காசு கட்டி எழுதி பாஸ் ஆயிட்டேன். சத்தியமா நான் "மத்தியமா " பாஸ் ஆயிட்டேன்.

அதுக்கு அப்புறம் ஹிந்தி டியூஷன் எடுக்குற தெரு பக்கம் கூட போகறது இல்லனு சத்தியம் பண்ணிட்டேன். எவனால ஒரு ஒரு பரிட்சைக்கும் மூணு, நாலு தடவ பரீட்சை எழுத முடியும்? நம்ம கூட சேர்ந்த சின்ன சின்ன பசங்கலாம் ஒரே முயற்சில பாஸ் பண்ணிட்டு போகும் போது நாம மட்டும் ஒரு எடத்துல இருந்த நல்லவ இருக்கு? அதுனால அன்னிக்கி இருந்து மலையாளம் கத்துகலாம் னு முடிவு பண்ணிட்டேன். ஆனா மலையாளம் மட்டும் கொஞ்சம் வித்யாசமா கத்துகலாம்னு மலையாள படங்களா பார்க்க ஆரம்பிச்சேன்!!!

மலையாளம் ..... (தொடரும்) போடலாம்னு நெனச்சேன் ஆனா மலையாள படத்துல வசனங்கள் கம்மி, ஆக்க்ஷன் தான் அதிகம் அதுனால மலையாளம் காத்துக முடியல!!!

2 comments:

Heyma Sindhu said...

Uru padrathukaana vazhiye illa.....

Vasu. said...

அந்த ஐயர் ஆன்டி பத்தி கொஞ்சம் விவரமா எழுதி இருக்கலாம்.