Wednesday 28 July 2010

MGR ... NTR .. STR...

சமீபத்தில் செய்தித்தாளில் படித்த ஒரு முக்கிய செய்தி இது. நம்ம "Little Super Star" oops "Young Super Star" சிலம்பரசன் லண்டன் செல்வதற்கு விசா வேண்டி விண்ணப்பம் செஞ்சி இருக்கார். அந்த விண்ணப்ப படிவத்தில் தனது முழு பெயரை "Silambarasan Thesingu Rajendran" என்று குறிபிட்டுள்ளார், இத பார்த்த நம்ம விசா ஆபிசர் "உங்க பெயரில் உள்ள முதல் எழுத்துக்களை மட்டும் பார்த்தல் "STR" னு வருது, அது MGR .. NTR .. மாதிரி கேட்பதற்கு நல்ல இருக்கு, நீங்களும் அவங்கள மாதிரி பெரிய ஆழ வருவீங்க னு காமெடி பண்ணி இருக்கார்.

இத நம்ம "Young Super Star" நெஜம்னு நம்பி எல்லாரும் தன்னை "STR" னு தான் கூப்டனும்னு சொல்லிட்டு திரியுறார். நம்ம மீடியாக்களும் இத ஒரு பெரிய விஷயமா எடுத்துகிட்டு கடந்த ஒரு வாரமா "STR" "STR" னு செய்தில போட்டுட்டு இருக்காங்க. இந்த கொடுமைலாம் நம்ம ஊர்ல தான் நடக்கும்னு நெனைக்குறேன்.

தமிழ் நாட்டையும் தமிழ் மக்களையும் யாரவுது காப்பாத்துங்க ....

Tuesday 22 June 2010

ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா

சின்ன வயசுல (இப்ப எனக்கு ரொம்ப வயசு ஆயிடல) அதாவுது கொசுவத்தி சுருல ஒரு பதினஞ்சி வருஷம் பின்னால சுத்தினா அப்ப நான் அஞ்சவுது படிச்சிட்டு இருந்தேன். நியூட்டன் ஆப்பிள் விழுறதா பார்த்து எதையோ கண்டுபிடிச்ச மாதிரி நானும் ஒரு நாள் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தப்ப ஒரு ஐடியா தோணிச்சி. நாம என் ஹிந்தி படிக்க கூடாதுன்னு. உடனே எங்க அப்பா அம்மா கிட்ட இந்த விஷயத்த சொல்ல அவங்களுக்கு ரொம்ப சந்தோசம். ஹிந்தி படிச்சா டெல்லி ல கூட போய் வேலை செய்யலாம், அப்புறம் வெளிநாடுகலாம் கூட போலாம் (இது பக்கத்துக்கு வீட்டு ஆன்டி போட்ட பிட்டு). நான் கூட ஹிந்தி கத்துகிட்டா வெளிநாடுலாம் போகலாம் போலன்னு நம்பிட்டேன்.

தான் கெட்ட குரங்கு வானத்தையும் சேர்த்து கெடுத்ததாம் கதையா எங்க அண்ணா, சித்தி பையன் எல்லாரும் சேர்ந்து ஹிந்தி கத்துக்க முடிவு பண்ணினோம். பக்கத்து நகர் ல ஒரு ஐயர் மாமி ஹிந்தி சொல்லி தருவது தெரிஞ்சி அங்க எங்களை சேர்த்து விட்டாங்க. வழக்கம் போல அ ஆ ல ஆரம்பிச்சி ஒரு மாசத்துல வார்த்தைக்கு வந்தாச்சி, அதோட எங்க ஹிந்தி ஆர்வமும் சூன்யம் ஆயிடிச்சி. ஹிந்தி ல பூ, மற்றும் வேற சில வார்த்தைகளை கேட்டா சென்னை தமிழ் ல பேசுற கெட்ட வார்த்தை மாதிரி இருக்கும். அப்ப அதுக்கு அர்த்தம் தெரியாது ஆனா சில பசங்க பேசி கேட்டு இருக்கோம். இந்த வயசான மாமி ரொம்ப பொறுமையா எங்களுக்கு ஹிந்தி வார்த்தைகள் சொல்லி தர, நான் என் சித்தி பையன் கிட்ட என்னடா இந்த ஐயூர் மாமி கெட்ட வார்தைலாம் பேசுறாங்கனு ஆரம்பிச்சேன்.

அதுவரைக்கும் இதை எல்லாம் கண்டுக்காம ஹிந்தி படிச்சிட்டு இருந்த பசங்க எல்லாம் நம்ம அவுட் ஒப் பாக்ஸ் திங்கிங் பார்த்துட்டு அதே மாதிரி அவங்களும் கவனிக்க ஆரம்பிச்சாங்க. இந்த மாதிரி கொடூரமா யோசிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் ஹிந்தி போய் வெறும் தமிழ் கெட்ட வாரத்தைகள் தான் கவனிக்க ஆரம்பிச்சோம். ஹிந்தி டியூஷன் வந்தாலே ஒரு சிரிப்பும் கும்மாளமுமா இருப்போம். பாவம் அந்த மாமி இந்த விஷயம் தெரியாம ரொம்ப அக்கறையோடு சொல்லி கொடுத்துட்டு இருப்பாங்க.

இந்த மாதிரி விளையாட்டு தனமா ஒரு மாதிரி "ப்ராத்மிக்" னு சொல்லுற முதல் பரிட்சைய எல்லாரும் வெற்றிகரமா முடிச்சோம். நம்ம ஹிந்தி ஆர்வம் தான் சிரிப்பா சிரிகுதேனு இதோட நிறுத்திடலாம்னு நெனச்சா வீட்டுல இருக்குறவங்க விடுறதா இல்ல. சரி வெற்றி வேல்! வீர வேல்! னு சொல்லிகிட்டே "மத்தியமா " னு சொல்லுற ரெண்டாவுது பரிட்சைக்கு டியூஷன் போக ஆரம்பிச்சோம்.

"மத்தியமா " எனக்கு பெரிய சவாலா தான் இருந்துச்சி (நாம படிச்சா தானே!) எந்த வார்த்தை கேட்ட வார்த்தை மாதிரி இருக்குனு ஆராய்ச்சி பண்ணிடே இருந்ததால அந்த மாமி சொல்லி தந்தது எதுவுமே மனசுல பதியல. எல்லாரையும் கிண்டல் பண்ணிட்டு, சிரிசிட்டே மூணு மாசம் டியூஷன் ஓடிடிச்சி. பரிட்சைக்கும் தைரியமா (அப்பா காசு தானே) காசும் கட்டி, பரிட்சையும் எழுதியாச்சி. எழுதியதும் நமக்கு முடிவு தெரிஞ்சிடிச்சி இருந்தாலும் யார்கிட்டயும் சொல்லல. எதிர் பார்த்த மாதிரியே என்ன்ன தவிர அந்த டியூஷன் ல படிச்சா எல்லாரும் பாஸ்.

சரி இதோட விட்டுடுவாங்க நாம தப்பிச்சிட்டோம் னு நெனச்சா "முயற்சி திருவினை ஆக்கும்" னு சொல்லி மறுபடியும் "மத்தியமா " பரிட்சைக்கு டியூஷன் சேர்த்து விட்டாங்க. மறுபடியும் அந்த முறையும் பரீட்சை எழுதி பாஸ்க்கு ரெண்டு மார்க் கம்மிய வாங்கினேன் (ஆமாங்க பாஸ் ஆகல, அத தான் கொஞ்சம் அழகா சொன்னேன்). இந்த முறை எனக்கே கொஞ்சம் அசிங்கம தான் இருந்துச்சி. மூணாவுது முறைய டியூஷன் போகாம, நண்பர்கள் (நண்பர்களா அவனுங்க, என்னா நக்கல் பண்றானுங்க ஒரு சாதாரண ஹிந்தி பரிட்சைல பாஸ் ஆகலன்னு) கிட்ட சொல்லாம, வெறும் பரிட்சைக்கு மட்டும் காசு கட்டி எழுதி பாஸ் ஆயிட்டேன். சத்தியமா நான் "மத்தியமா " பாஸ் ஆயிட்டேன்.

அதுக்கு அப்புறம் ஹிந்தி டியூஷன் எடுக்குற தெரு பக்கம் கூட போகறது இல்லனு சத்தியம் பண்ணிட்டேன். எவனால ஒரு ஒரு பரிட்சைக்கும் மூணு, நாலு தடவ பரீட்சை எழுத முடியும்? நம்ம கூட சேர்ந்த சின்ன சின்ன பசங்கலாம் ஒரே முயற்சில பாஸ் பண்ணிட்டு போகும் போது நாம மட்டும் ஒரு எடத்துல இருந்த நல்லவ இருக்கு? அதுனால அன்னிக்கி இருந்து மலையாளம் கத்துகலாம் னு முடிவு பண்ணிட்டேன். ஆனா மலையாளம் மட்டும் கொஞ்சம் வித்யாசமா கத்துகலாம்னு மலையாள படங்களா பார்க்க ஆரம்பிச்சேன்!!!

மலையாளம் ..... (தொடரும்) போடலாம்னு நெனச்சேன் ஆனா மலையாள படத்துல வசனங்கள் கம்மி, ஆக்க்ஷன் தான் அதிகம் அதுனால மலையாளம் காத்துக முடியல!!!

Wednesday 2 June 2010

என்னய்யா கூத்து இது?

ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நண்பர் ஒருவர் மூலமாக ஒரு பிரபலமான எழுத்தாளர் (?) அறிமுகம் ஆனார். அறிமுகம்னா நேரடியாக இல்லை, அவருடைய வலைபதிவுகளின் அறிமுகம் கிடைத்தது. அன்றையில் இருந்து தினமும் அவருடைய வலைபதிவுகளை படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். அந்த எழுத்தாளர் எழுதுவது 90 % கருத்துகளில் எனக்கு உடன்பாடு கிடையாது ஆனாலும் சில பதிவுகள் சிறப்பாக இருக்கும் மேலும் சில காமெடி விசயங்களும் இருக்கும் ஆதலால் தொடர்ந்து படித்து வருகின்றேன்.

கொஞ்ச நாளைக்கி முன்னாடி நம்ம நித்யனந்தாவை பற்றி ஆகா ஓஹோன்னு எழுதிட்டு இருந்தார் நம்ம பிரபலமான எழுத்தாளர் (?). அவர் தான் கடவுள், எனக்கு ரெண்டு எடத்துல ஒரே நேரத்துல காட்சி தந்தார் அது இதுன்னு நெறைய எழுதினர். என்னிக்கி டிவில சாமியாரோட காம களியாட்டம் வெளிஆனதோ அன்னிக்கே நம்ம பிரபலமான எழுத்தாளர் (?) தனது வலைபதிவுல அந்தர் பல்டி அடிச்சிட்டார். எனக்கு தெரியும் இந்த சாமியார் ஒரு திருடன்னு, அவர் எழுதின நூல்களை மொழிபெயர்த்ததுக்கு எனக்கு இன்னும் காசு தரவில்லை அது இதுன்னு நிறைய எழுதினர்.

சரி இதுலாம் சகஜம், கீழ விழுந்தாலும் மண் ஒட்டலன்னு சொல்லுறது எல்லாரும் செய்யுறது தான்னு நானும் எடுத்துகிட்டேன். நேத்து இரவு விஜய் டிவில "நீயா நானா" நிகழ்ச்சில நம்ம பிரபலமான எழுத்தாளர் (?) கலந்துகிட்டார் (ஏற்கனவே அந்த டிவி நிகழ்ச்சில கலந்துகிட்டு பேசினது காசு தரவில்லைன்னு நிறைய பொலம்பி இருக்கார் நம்ம பிரபலமான எழுத்தாளர், இருந்தாலும் ஏன் மறுபடியும் கலந்துகிடார்னு தெரியல)

நிகழ்ச்சில இவர பார்த்து நீங்க சாமியார நம்பி உங்க வலைபதிவுல நிறைய எழுதுனீங்க, அப்புறம் நீங்களே சாமியார் சரியானவர் இல்லன்னு எழுதுனீங்க ஆனா உங்க எழுதுகள படிக்குற கூட்டம் நீங்க எழுதுனத நம்பி சாமியார் கிட்ட ஏமாந்து இருப்பாங்க, எப்ப நீங்க சாமியார மறுத்தாலும் அவங்க நம்பிக்கை மாறாது அதுனால உங்க வாசகர்கள் கிட்ட நீங்க மன்னிப்பு கேட்பீங்களானு கேட்டாங்க.

நம்ம எழுத்தாளரும் என்ன என்னவோ சமாளிச்சி பார்த்தாரு அப்புறம் கடைசியா ஆமாம் நான் அவர்களை தவற வழிநடதிடேன், மன்னிப்பு கேக்குறேன்னு சொல்லிட்டார். இது நடந்தது போன ஞாயிற்று கிழமை. நிகழ்ச்சி ஒலிபரப்பு ஆனது தான் ஞாயிற்று கிழமை ஆனா படம் பிடிச்சது எப்பனு தெரியல. அவரே அவர் வலைபதிவுல பெருமையா இன்று விஜய் டிவில அடியேன் பேசுறேன் பாருங்கன்னு போட்டு இருந்தார்.

ஒரு ரெண்டு நாளைக்கி அப்புறம் என்னை அந்த நிகழ்ச்சில ரொம்ப சாதுர்யம பேசி மன்னிப்பு கேள்னு சொல்லி மடகிடாங்க. நான் ரொம்ப அப்பாவி, எனக்கு இந்த மாதிரி திடீர் தாக்குதலை சமாளிக்க தெரியல. அவங்க செஞ்சது பெரிய தப்பு, நான் ஏன் மன்னிப்பு கேக்கணும் அது இதுன்னு எப்பவும் போல அவர் பாணியல உளறிட்டு இருக்கார். அவரே மூச்சிக்கு முன்னூறு தடம் சொல்லுற ஒரு விஷயம் என்னனா அவர் 35 வருசமா எழுத்து உலகத்துல இருக்குறேன் னு. அந்த மாதிரி இருக்குற ஒருத்தர், உலகத்துல இருக்குற எல்லா விசயத்த பத்தியும் கருத்து சொல்லுற ஒருத்தர், இளையராஜா முதல் A R ரஹ்மான் வரைக்கும் அமைகின்ற இசை குப்பை, இவர்களுக்கு உலக இசை பத்தி புரிதல் இல்லன்னு பேசுற ஒருத்தர், நிகழ்ச்சில கேள்வி கேட்கும் போதே "நான் ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும்?" னு தைரியமா கேட்க வேண்டியது தானே?

சின்ன பசங்க மாதிரி மன்னிப்பு கேட்டு அப்புறம் வந்து ரெண்டு நாள் யோசிச்சி வலைபதிவுல எதிர்ப்பை காட்டுவானேன்? என்னய்யா கூத்து இது?

வடிவேலு சொல்லுற மாதிரி "உங்களலாம் பார்த்த எனக்கு பாவமா இருக்கு"

Wednesday 19 May 2010

சலூன்...

சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் எனக்கு ஒரு நல்ல அனுபவம், மனநிறைவு தராத ஒரே விஷயம் இந்த முடிதிருத்தகம் தான். நானும் எவ்வளவோ கடைகள் மாத்தி பாத்துட்டேன் ஆனா ஒரு தடவை கூட நான் நெனச்ச மாதிரி யாருமே எனக்கு முடி திருத்தம் செஞ்சது இல்ல. பத்து வயசு இருக்கும் போது ஆசைய போய் இப்படி வெட்டு அப்படி வெட்டுன்னு நிறைய சொல்லிட்டு உட்காருவேன், கடைசியா பார்த்தா சதுரவட்டைனு சொல்லுவாங்களே அந்த மாதிரி வெட்டி வெச்சிருப்பான். ரொம்ப கோவமா கடைய விட்டு வெளிய வந்த எங்க அப்பா ஸ்டைல் ல நின்னுட்டு இருப்பார். அப்ப தான் தெரியும் இவரு சொல்லி தான் இப்படி வெட்டி விட்டு இருக்கான்னு.

நானும் கடைய மாத்தி பார்த்தேன் ஆனா ஒன்னும் வேலைக்கு ஆகல. கொஞ்சம் வயசு ஆனதுக்கு அப்புறம் பைக் எடுத்துகிட்டு தூரமா இருக்குற கடைக்கு போவேன் (அப்பா தொந்தரவு இருக்க கூடாதுன்னு) ஆனா அங்கயும் ஏதோ ஒரு குறை இருக்கும். மனசுக்கு முழு திருப்த்தி கிடைகல. இப்படியே இவ்வளவு காலம் ஓடி போச்சி. ரெண்டு நாளைக்கு முன்னாடி இங்க ஜெர்மனி ல முடி வெட்ட போனேன். நமக்கு தான் இந்தியாலேயே சரியா வெட்ட மாடேனுன்களே இங்க என்னத்த வெட்ட போறானுங்கனு நெனசிடே தான் போனேன்.

எனக்கு முன்னாடி ஒரு கருப்பனுக்கு முடி வெட்டுறேன்னு மொட்டை அடிச்சிட்டு இருந்தானுங்க. அவன முடிச்சிட்டு என் கிட்ட வந்தான். இந்த கொடுமைல பாஷை வேற ஒரு பிரச்சனை. அவனுக்கு இங்கிலீஷ் ல எப்படி வெட்டனும்னு சொல்ல ஆரம்பிச்சவுடனே "எனக்கு தெரியும், இதே ஸ்டைல் ல கொஞ்சம் கம்மி பண்ணனும் சரியானு?" கேட்டான். எனக்கு ரொம்ப ஆச்சர்யமா போய்டிச்சி அடடா இவன போய் தப்ப நெனசிடோமேனு மனசுக்குள்ள வருத்தப்பட்டேன். ரொம்ப சந்தோசமா ஆமாம்னு தலைய ஆட்டினேன். கத்திரி இல்லாம ஒரு பதினஞ்சி நிமிஷம் என் தலைல விளையாடினான். சும்மா சொல்ல கூடாது கவுண்டமணி ஒரு படத்துல சொல்லுவானே "அண்ணன் சிற்பி மாதிரி, எப்படி செதுகுறேன் பார்த்தியான்னு" அந்த மாதிரி என் தலையை செதுக்கினான்.

பதினஞ்சி நிமிஷம் கழிச்சி கண்ணாடில பார்த்தேன். பார்த்ததும் சிரிப்ப அடக்க முடியல என்னால. பத்து வயசுல அடிச்ச அதே சதுரவட்டை!! நான் சிரிப்பதை பார்த்துட்டு "சந்தோஷமான்னு" கேட்டான். வேற என்ன சொல்லுறது "ரொம்ப சந்தோசம்" னு சொல்லிட்டு பத்து ஐரோ கொடுத்துட்டு வீட்டுக்கு வந்தேன்.

பார்பர் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!!!!

சாம்பார்...

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சாப்பாடுக்கு சிங்கி அடிச்சப்ப வேற வழி இல்லாம சுய சமையல் தான் உசுர காப்பாத்திக்க ஒரே வழின்னு டெய்லி அம்மாவோட ஆன்லைன் சப்போர்ட்ல சமைக்க ஆரம்பிச்சேன்.

சென்னைல இருந்த வரைக்கும் ராஜா மாதிரி தட்ட கூட கழுவினது இல்ல. எல்லாமே டேபிள்கு வந்துடும் எப்ப என்னடானா நிலைமை தல கீழா மாறிடிச்சி. இதுல உப்பு இல்ல, அதுல பெருங்காயம் ஜாஸ்தின்னு அதிகாரம் பண்ணினது எல்லாம் பிளாஷ் பாக் வந்து போச்சி. இதுக்குலாம் அசர கூடாதுன்னு கைல கரண்டிய எடுத்தேன்.

சின்ன பேப்பர் ல பிட் எழுதி வெச்சிகிட்டேன். ஒரு ரெண்டு நாளைக்கி சாம்பார் மாதிரி வந்தது அப்புறம் சாம்பாரே வந்தது. ஒரு பத்து தடவ செஞ்சதும் மனப்பாடம ஆயிடிச்சி. வேலைல இருந்து வந்ததும் டக்கு டக்குனு ஒரு அரை மணி நேரத்துல சாம்பார் வெச்சி சாதம் வெச்சிடுவேன். சில சமயத்துல எனக்கு ரொம்பவும் பிடிச்ச முள்ளங்கி சாம்பார் அற்புதமா வந்திருக்கும் அப்ப எனக்கு நானே சுத்தி போட்டுப்பேன். எப்படி நல்லா போயிட்டு இருந்த டைம் ல தான் சென்னை போகவேண்டிய கட்டாயம் வந்தது. சென்னை போனதுக்கு அப்புறம் சமையல் கட்டு பக்கம் தல கூட வெச்சி படுக்கல.

இப்ப ரெண்டு வருஷம் கழிச்சி மறுபடியும் சுய சமையல். ஜெர்மனி வந்து ஒரு மூணு வாரம் ரெடிமேடு ரசம், பருப்பு பொடி, ஊறுகாய், முட்டை பொரியல்னு ஓடிட்டேன். இதுக்கு மேல எப்படியே போச்சினா ரொம்ப சீக்கிரம் நாக்க ஜெர்மனி சுடுகாட்டுல புதைக்க வேண்டியதுதான். அதுக்குள்ள எதாவுது செயலாம்னு நேத்து களத்துல எறங்கினேன். பக்கத்துல இருக்குற ஒரு கடைல போய் துவரம் பருப்பு, புளி, கடுகு, மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, சமையல் எண்ணெய், மிளகாய் பொடி எல்லாம் வாங்கிட்டு வந்தேன்.

முருங்கைக்காய் சாம்பார் செயலாம்னு முடிவு செஞ்சி அதுக்கு தேவையானதையும் வாங்கிட்டு வந்து ஒரு வழிய செஞ்சி முடிச்சேன் (அம்மா கிட்ட ஆன்லைன் சப்போர்ட் கேட்டு தான்). சும்மா சொல்ல கூடாது சாம்பார் பிரமாதம வந்துச்சி. உப்பு, கரம் எல்லாம் சரியாய் இருந்ததாலே ஒரு பிடி சாதம் அதிகமாவே சாப்டேன். ஒரு மாசத்துக்கு அப்புறம் ரசிச்சி சாபிட்டேன்னு சொல்லலாம். இந்த கூத்து இன்னும் கொஞ்சம் நாளைக்கி தான் அப்புறம் என் அருமை மனைவி வந்துடுவா அப்புறம் ஒன்லி ஹெல்பிங் தான் நம்ம வேலை.

நம்பிக்கை தான் வாழ்கை அதுனால என் மனைவி விசா சீக்கிரம் வந்துடும்னு நம்பிக்கையோடு இன்னும் கொஞ்சம் நாள் இந்த மாதிரி வாழ்க்கைய ஓட்டபோறேன் !!!

Tuesday 4 May 2010

கல்ல கண்டா நாய காணோம்!

என்னடா தலைப்பே ஒரு மாதிரி இருக்குனு பாக்குறீங்களா? ஆமாங்க கொஞ்சம் குண்டக்க மண்டக்க தான் லைப்ம் போயிட்டு இருக்கு. லண்டன்ல ராஜா மாதிரி வாழ்ந்துட்டு இருந்தேன் கொஞ்சம் நாள். எல்லாமே ரொம்ப நல்ல போயிட்டு இருந்தது. உண்மைய சொல்லனும்னா லண்டன் வந்த புதுசுல சுத்தமா புடிக்கல அந்த லைப் ஸ்டைல் அப்புறம் நாள் போக போக நாமளும் லண்டன் வாசியாவே மாறியாச்சி. பிரெண்ட்ஸ் கூட கார்ல சுத்துறதும், இந்தியன் ஹோடெல்லா பார்த்து நல்லா மூக்கு பிடிக்க சாப்புடுறது சூப்பர் ரா போயிட்டு இருந்தது லைப். லைட் டா ஒரு சந்தோசம் வந்துச்சி சரி இந்த ஊரு செட் ஆயிடிச்சி அப்படியே கொஞ்ச நாள் ஆட்டைய போடலாம்னு.

எங்க இருந்து தான் நம்மள வாட்ச் பண்னுவான்கனே தெரியல, திடீரின்னு சென்னை போக வேண்டிய ஒரு நிலைமை வந்துச்சி. சரி போதும் போடா இந்த ஊரு, பேசாம இந்திய போய் நிம்மதியா இருக்கலாம்னு பொட்டிய கட்டிட்டு ஓடி வந்துட்டேன் இந்தியாக்கு. வந்து ஒரு வருஷம் நல்ல தான் போயிட்டு இருந்துச்சி. இப்படியே ஆபீஸ் விட்டா வீடு, வீடு விட்டா ஆபீஸ், அப்புறம் வார கடசில ஒரு சினிமா, பீச், ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ பசங்களோட ஒரு சின்ன டூர்னு சுகமா போயிட்டு இருக்கேன்னு நெனச்சேன். மறுபடியும் ஆட்டைய கலைக்க ஆளு வந்தாச்சி.

இவ்வளவு நாள் சும்மா இருந்த க்ளின்ட் ஏன்டா அப்பா அங்க சந்தோசமா இருக்க இங்க வந்துடுன்னு சொல்லிட்டான். நம்ம பொழப்பு தான் நாய் பொழப்பா போச்சின்னு நெனச்சிகிட்டு மறுபடியும் பொட்டிய கட்டிட்டு ஜெர்மனி வந்துட்டேன். வடிவேலு மாதிரியே நம்மள டீல் பண்ற மாதிரி ஒரு பீலிங். இந்த தடவ உஷார இருப்பேன், எப்ப இந்த ஊரு ஓகே னு தோணுதோ அப்பவே ரெடி ஆயிடுவேன் இந்திய போக

பின் குறிப்பு: ஓடுறவன தான் விதி தூரத்தும் னு யாரோ சொன்னது நியாபகத்துக்கு வருது

ஜெர்மனி

வேலை நிமித்தமாக ஜெர்மனி வந்து இருக்கேன். ஏற்கனவே போன வருஷம் ரெண்டு தடவ வந்த ஊருதான். ஒரு சின்ன வித்யாசம் என்னனா இந்த தடவ "work permit" ல வந்து இருக்கேன். சரி அதுக்கு என்ன இப்போனு நீங்க கேக்குறது புரியுது. எப்பவுமே "long term" ல ஒரு நாட்டுக்கு வரும் பொது சில விஷயங்கள் புதுசா இருக்கும் அந்த மாதிரி இங்க ஜெர்மனி ல நான் சந்தித்த விசயங்களை சொல்ல தான் இந்த பதிவு.

இந்த பயணம் ஆரம்பத்துல இருந்தே கொஞ்சம் இல்ல நிறையவே இடையூறுகள் தந்தது. நான் கிளம்பின வாரம் இங்க ஜெர்மனி ல ஏதோ பொருட்காட்சினு விமான டிக்கெட் கிடைகல. கடைசி நேரத்துல ஒரு விமானத்துல டிக்கெட் கிடைச்சிது ஆனா இருபது கிலோ தான் அனுமதி. ரொம்ப நாள் அங்க போறதால என் கிட்ட இரண்டு பொட்டி இருந்தது. ஒரு வழிய அதிக கட்டனும் செலுத்தி எல்லா சாமான்களையும் இங்க கொண்டு வந்தேன். எல்லா கம்பெனி போல எங்க கம்பெனியும் முதல் இரண்டு வாரத்துக்கு தான் ஹோட்டல் ரூம் தருவாங்க அதுக்குள்ள நாம வீடு பாத்துக்கணும்.

வந்து சேர்ந்த நாள்ல இருந்து வீடு தேட ஆரம்பிச்சேன். ஒரு பெரிய கொடுமை என்னனா இங்க எல்லாமே இவங்க மொழில தான் இருக்கும். ஒரு பக்கம் கூகிள் வெச்சிகிட்டு எல்லா வாடகை விளம்பரத்தையும் மொழி மாற்றம் செய்து வீடு தேடினேன். ஜெர்மனில வீடு தேடி தரும் ஏஜெண்ட்ஸ் மூணு மாச வாடகைய கட்டணமா கேக்குறாங்க, சிலர் இரண்டு மாத வாடகையை கட்டணமா கேக்குறாங்க. ஒரு வாரம் தினமும் நாலு மணிநேரம் இந்த தேடுதல் வேட்டை நடந்தது ஆனாலும் ஒரு முன்னேறமும் இல்ல. ஒரு வழியா ஒரு இந்தியன் மூலமா இந்தியர்கள் இருக்குற ஒரு பிளட்ஸ்ல வீடும் கிடைத்தது.

ஒரு பெரிய நிம்மதி, சரி அடுத்தது என்னனு பாக்கலாம்னு பார்த்த பேங்க் அக்கௌன்ட் ஓபன் பண்ணனும். அது ரொம்ப சுலபம், ஒரு பத்து நிமிஷ வேலை தான். அப்புறம் இங்க இருக்குற அலுவலகத்துல நீங்க ஜெர்மனில வந்த நாள், தங்குகிற இடம், உங்கள் சம்பளம் எல்லாத்தையும் பதியனும். உங்களுக்கு முதல மூணு மாசத்துக்கு தான் விசா தருவாங்க இந்தியால. இங்க வந்து நீங்க உங்க விவரத்தை தந்ததும் ஒரு இரண்டு வாரம் கழித்து உங்களுக்கு விசா மாற்றி தருவாங்க. இது ஒரு தேவை இல்லாத ஆணி ஆனாலும் வேற வழி இல்ல நீங்க இத செய்து தான் ஆகவேண்டும். இங்க பதிவது, விசா மாற்றி தருவது எல்லாம் சுலபமான காரியம் தான் ஆனாலும் நீங்க ரெண்டு தடவை நேரில் போகவேண்டும்.

இங்க மேல சொன்ன எல்லா விசயமும் எல்லா நாட்டிலையும் இருக்கு ஆனா ஜெர்மனி இருக்குற பெரிய பிரச்சனை மொழி. மொழி தெரியாம முதல் ரெண்டு வாரம் கொஞ்சம் தலைவலி தான். எல்லாம் முடிந்ததும் வாழ்க்கை கொஞ்சம் சுலபம். பொதுவாவே இங்க இருக்குற ஆட்கள் கொஞ்சம் இல்ல நிறையவே சோம்பேறிகள் தான். ச்சே சோம்பேறிகள் கிடையாது ஆனால் ரொம்பவே ஆமை வேகத்துல தான் வேலை செய்வார்கள். பொறுமை போய்டும் நமக்கு ஆனா ஒரு வருஷம் இங்க இருந்த நெறைய பொறுமை வந்துடும்.

இப்போ இருக்குற மிக பெரிய தலைவலி என்னனா என் மனைவியின் விசா தான். ஜெர்மனி போக நினைக்கும் திருமணம் ஆனா எல்லாருக்கும் நான் சொல்லுறது என்னனா உங்க மனைவியை கூட கூட்டிட்டு போக நெனசீங்கனா கண்டிப்பா மூணு மாசத்துக்கு முன்னாடி விசா விண்ணப்பம் செய்யுங்க. மனைவி மற்றும் குழந்தைக்கு விசா வரதுக்கு கண்டிப்பா மூணு மாசம் ஆகும். நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலியா இருந்த சீக்கிரம் வரும். தேவை இல்லாத நிறைய தலைவலி இருக்கு இந்த விசா ல. சில சமயம் உங்கள் திருமணத்தை விசாரிக்கணும்னு சொல்லுவாங்க. அப்படி நடந்தால் இன்னும் ஒரு இரண்டு மாதம் ஆகும் விசா வரதுக்கு. யாரவுது மனைவியை கூடவே கூட்டிட்டு போகணும்னு நினைச்ச, நீங்க கண்டிப்பா மூணு மாசத்துக்கு முன்னாடி விசா விண்ணப்பம் அனுப்புங்க இல்லனா என் கதி தான்.

இங்க இருக்குற போற நாட்கள் ல ஜெர்மனி பத்தி எனக்கு தெரிஞ்சத எழுதுறேன். உங்களுக்கு உதவியா இருக்கும் என்ற நம்பிக்கையோடு.