Friday 13 March 2009

அற்றைத்திங்கள் வானிடம்...

நான் ரசித்த இன்னொரு பாடலின் வரிகளை இங்கே தந்து உள்ளேன்.
படம்: சிவப்பதிகாரம்

அற்றைத்திங்கள் வானிடம்
அல்லிச்செண்டோ நீரிடம்
சுற்றும் தென்றல் பூவிடம்
சொக்கும் ராகம் யாழிடம்
காணுகின்ற காதல் என்னிடம்
நான்,தேடுகின்ற யாவும் உன்னிடம்

அற்றைத்திங்கள்....

அடி தொட ,முடி தொட,ஆசை பெருகிட,நேரும் பலவித பரிபாஷை
பொடி பட ,பொடி பட, நாணம் பொடி பட,கேட்கும் மனதினில் உயிரோசை
முடி தொட ,முகம் தொட ,மோகம் முழுகிட,வேர்க்கும் முதுகினில் இதிகாசம்
உருகிட உருகிட,ஏக்கம் உருகிட,கூடும் அனலிது குளிர் வீசும்]

குலுங்கினேன் உடல் கூசிட,கிறங்கினேன் விரல் மேய்ந்திட
மயங்கினேன் சுகம் சேர்ந்திட,தளும்பினேன் எனை நீ தொட,பாய்ந்திட,ஆய்ந்திட
காணுகின்ற காதல் என்னிடம்
நான்,தேடுகின்ற யாவும் உன்னிடம்

அற்றைத்திங்கள் வானிடம்...

உடல் எது,உடை எது,தேடும் நிலை இது,காதல் கடன் இது ,அடையாது
இரவிது, பகலிது, தேங்கும் சுகம் இது, சாகும் வரையிலும் முடியாது
கனவெது, நினைவெது,கேட்கும் பொழுதிது,காமப்பசி வர அடங்காது
வலமிது, இடமிது,வாட்டும் கதையிது,தீண்டும் வரையிலும் விளங்காது

நடுங்கலாம் குளிர் வாடையில்,அடங்கலாம் ஒரு ஆடையில்
தயங்கலாம் இடைவேளையில்,உறங்கலாம் அதிகாலையில்,கூடலில்,ஊடலில்
காணுகின்ற காதல் என்னிடம்
நான்,தேடுகின்ற யாவும் உன்னிடம்

அற்றைத்திங்கள் வானிடம்...

No comments: