Monday 14 April 2008

முதியோர் இல்லம்...

சரஸ்வதி முதியோர் காப்பகம்
பெயர் பலகையை பார்த்தும் பளீர் என்று இதயத்தில் ஒரு வலி
அப்பா அட்மிஷன் வாங்கிட்டேன்
மாதம் ஒரு முறை வந்து பார்த்துட்டு போகிறேன்
புன்னகையுடன் என் மகன் என்னிடம் கூறினான்
முப்பது வருடத்திற்கு முன்னால் நான் கூறிய அதே வார்த்தைகள்
ஒரு சின்ன சந்தோஷம் என் பேரன் இன்று இங்கே இல்லை

No comments: